​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி

Published : Oct 09, 2024 6:01 PM

''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி

Oct 09, 2024 6:01 PM

இந்துக்களை பிளவுப்படுத்தவும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டி விடவும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை காணொலியில் தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பொறுப்பற்ற கட்சியான காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் ஆலையாக செயல்படுகிறது என்றார்.

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றி மக்களின் மனநிலையை காட்டியதாகவும், மகாராஷ்டிராவில் பெரியளவில் பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.